செய்வினை,செய்வினை தோஷம், செய்வினை விலக,செய்வினை தோஷம் நீங்க

செய்வினை நீக்க எளிய முறை:
இந்தக் காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தன்னுடைய து எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிச்சல் இல்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர்.  செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி,  தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய வழிமுறை உண்டு.
1. வெண்கடுகு - 250 கிராம் 2. நாய்க்கடுகு - 250 கிராம் 3. மருதாணி விதை - 250 கிராம் 4. சாம்பிராணி - 250 கிராம் 5. அருகம்புல் பொடி - 50 கிராம் 6. வில்வ இலை பொடி - 50 கிராம் 7. வேப்ப இலை பொடி - 50 கிராம்  இவைகளை நாட்டு மருந்து கடைகளில் கேட்டு வாங்கவும். சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை. 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தக்கூடாது. ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை. யார் காலிலும் படக்கூடாது. இப்படி செய்தால் செய்வினை நீங்குவதில் எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.